going to temple ... i like to see bakthi, saantham, kopam, porumai
நீ என்னை கண்டிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்......பக்தி, சாந்தம், கோபம், பொறுமை, இவற்றை உன்னிடம் பார்க்க விரும்புகிறேன்...
கோவப் பார்வை வேண்டும்
துர்க்கை போல்
சாந்தப் பார்வை வேண்டும்
பார்வதி போல்
காதல் பார்வை வேண்டும்
ஸ்ரீமதி ராதா ராணி போல்
கோவிலுக்கு செல்கிறாள் - Continue
என் தேவதை கோவிலுக்கு செல்கிறாள்
முப்பெரும் தேவிகளை தரிசிக்க செல்கிறாள்
நீல வண்ண தாவணி உடுத்திக்கொண்டு, மலர்கள் அணிந்து
ஸ்ரீமதி ராதா ராணி போல் செல்கிறாள்
தாமரை விழிகளால் தேவிகளிடம் பேசுகிறாள்
பால் வண்ண நிலவு போல் சிரிக்கிறாள்
கை வளையல்கள் இசைகக, தேவியை வணங்குகிறாள்
பார்வதி தேவியின் அன்பை பெறுகிறாள்
கோவிலில் தாமரையின் பாதம் பட்டதால்,
தேவர்களும், முனிவர்களும், நிலவின் குளுமையை பெற்றார்கள்
கோவில் பிரஹாரத்தை சுற்றி வருகிறாள்
அன்னப் பறவையை போல்
தேவர்களையும், முனிவர்களையும் துயில் எழுப்பினால்
கால் கொழுசின் ஓசையால்
சரஸ்வதி, லக்ஷ்மி தேவியை தரிசிக்கிறாள்
அழகிய மான் விழியால்
துர்கை அம்மனுக்கு, நெய் விளக்கு ஏற்றுகிறாள்
பூ போன்ற, பிஞ்சு விரல்களால்
அகல் விளக்கின் முன் அமர்ந்து தியானம் செய்கிறாள்
முல்லை கொடி போல்
No comments:
Post a Comment