Wednesday, December 27, 2006

என் மனதை படிக்க உனக்கு மட்டுமே அனுமதி

என் கவிதைகள் உனக்கே சொந்தம்
மற்றவர்கள் படிக்க அனுமதி இல்லை
அவை கவிதைகள் அல்ல, என் மனம்
தாமரை படிக்க மட்டுமே அனுமதி

http://www.tamil.net/aggregator/categories/26

tamil.net is crawling blog pages and today it listed my lotus-poem blog in it's website... So Now, i have changed my lotus-poem blog as private...and disabled blog notification to all my lotus blogs.

Tuesday, December 26, 2006

25 Transcendental qualities

I found these 25 qualities of radharani's in you 'lotus'

வருகை

இது நாள் வரை நான்

நிலவின் வருகைக்காக காத்திருந்தேன்

இன்று முதல் தாமரை

சூரியனின் வருகைக்காக காத்திருப்பாள்

கவிதைகள் தாமரை பாதத்திற்கு

My kavidhai

உன்னிடம் முதன் முதலில் பேசும் போது கவிதை எலுத தெரியாது என்றேன், ஆனால் இப்பொழுது நீயே என்னை கவிஞனாக்கி விட்டாய்...


தாமரைப் பெண்னே

கண்டேன் தாமரைப் பெண்னே உன்னிடம்
நிலவின் குழுமையை உன் விழிகளிலும்
பாலின் தூய்மையை உன் மனதிலும்
இளம் சிவப்பு தாமரையின் அழகை உன் செவ்விதழ் உதடுகளிலும்
வெண் தாமரையின் மென்மையை உன் பாதங்களிலும்
கார் மேகத்தின் கருமையை உன் கருவிழிகளிலும்
அமேசான் காட்டின் அடர்த்தியை உன் கூந்தலிலும்
குயிலின் இசையை உன் இனிய குரலிலும்

மயிலின் நாட்டியத்தை உன் அன்ன நடையிலும்
துளசி்ச் செடியின் புனிதத்தை உன் நற்குணத்திலும்
கண்டேன் பெண்னே !, இத்தனை அழகையும் கண்ட என் மனது ஏனோ
உன் மனதையும், குரலையும் தான் அதிகம் நேசி்க்கிறது
தாமரைப் பெண்னே.

BECOME POSSESSIVE

கடல் அலைகள் என் தேவதையின் பொற் பாதத்தைதொட்டுச்
சென்ற போது
Mobile Phone என் குயிலின் இனிய குரலை
கேட்டு ரசிக்கும் போது
Hand Bag என் தேவியின் மிருதுவான தோள்களில்
சாய்ந்து உறங்கும் போது
Id-card என் தாமரையின் சங்கு கழுத்தை
அலங்கரிக்கும் போது...

Keyboard என் மல்லிகையின் கை விரல்கள்
தட்டச்சு செய்யும் போது

முப்பெரும் தேவி

Hey Lotus ....
உன் திருப்பெயரில் முப்பெரும் தேவியை காண்கிறேன்
[பார்வதி(ur name) – அன்பின் சொரூபம் அன்னை பார்வதி தேவி
வெண்தாமரை – அறிவின் ஆலயம் சக்தி சரஸ்வதி தேவி
செந்தாமரை – செல்வத்தின் களஞசியம் லஷ்மி தேவி]
உன் திருமுகத்தில் பௌர்ணமி நலவை காண்கிறேன்


ரோஜா பூக்களின் கர்வம்

தேவதை போல் வானில் இருந்து இறங்கி வந்தால் என் தாமரை
அலை கரையை வந்து தொட்டு சென்றது போல் இருந்தது
பகலில் நட்சத்திரம் தோன்றி மறைந்தது
Tidel park பிரகாசம் ஆனது
எல்லா ரோஜா பூக்களின் கர்வமும் அடங்கியது


To peacock, parrot and cuckoo...


என் தாமரையை பத்திரமாக பார்த்துக்கொள்ள
மயிலே நீ அவளுக்கு தோழியாய் இரு
என் தாமரையின் மழலைக் குரலை கேட்க
கிளியே நீ அவள் குரலை பதிவு செய்து கூறு
என் தாமரை இனிதாய் கண் உறங்க
குயிலே நீ தாலாட்டு பாடு

நெல்லை விரைவு வண்டி


என் தேவதையை பார்ப்பதற்காக நெல்லை
விரைவு வண்டியில் முன்பதிவு செய்திருந்தேன்

Hey Lotus உன் திருமுகத்தை காண......
காத்திருநதேன் ரயில் நிலைய வாயிலில்
உன் வருகையை எதிர்பார்த்து....
நாடினேன் GOOGLE தேடு பொரியை உன் பெயரை
ஓவ்வொரு பெட்டியின் பெயர் பட்டியலில் தேட
தேடினேன் ரயில் நிலையம் முழுவதும்
பௌர்ணமி நிலவை காண….
ரயில் புரப்பட்டது, ஏஙகியது கண்கள் உன்னை காணாமல்

Place : Madurai junction Time : early morning

அதிகாலை விடிந்தது, ரயில் அடைந்தது மதுரையை
என் தேவதை குடியிருக்கும் மாநகரம்...
ஆம் அன்னை மீனாட்சி ஆட்சி புரியம் சொர்கம்
மறுபடியும் தேடினேன் தேவதையை பார்ப்பேன் என்ற நம்பிக்கையில்.....

But Train gets green signal to start… and I got red signal “lotus not found”

மீண்டும் ரயில் புரப்பட்டது, ஏஙகியது மனம் உன்னை காணாமல்
வழியில் அழகிய மயிலைப் பார்த்தேன்

Hey peacock, tell her that I want to talk.....At 7.00 a.m Train reaches kovilpatti, From there I got down and took bus to my sweet home (Tuticorin)

i am seeing her after 42 days....

என் மனது உயிர் பெற்றது இன்று

தாமரையை பார்த்தவுடன்...

ஏனோ என் மனம் கர்வம் கொண்டது

மற்ற ரோஜாக்களை பார்த்து சிரிக்கிறது....

என் தாமரை போல் ஆகுமா உங்கள் அழகு

என்று கேட்க தோன்ருகிறுது

பௌர்ணமி நிலவா

நீ என்ன அந்த பௌர்ணமி நிலவா, நான்
உன்னை மாதம் ஒரு முறை தான் பார்க்க முடிகிறது
நான் அந்த நட்சத்திரமாக மாற வேண்டுமா
உன்னை தினமும் பார்ப்பதற்கு

மாலை வேளையில்

தினமும் மாலை வேளையில் வீடு திரும்பும் போது
பூககடையை நோக்கி என் கண்கள் தேடுகிறது தாமரை மலர்களை
என் கண்கள் கூட உன்னை விரும்புகிறது, மனதிற்கு தெரியாமல்
நான் என்ன சொல்வது என் விழியை, நீயே பதில்சொல்

உன்னோட mobile கூட உன் குரலை தினமும் கேட்குது,
என்னோட மனது கேட்க முடியவில்லை
என் மனத்திற்குள் நீ பேசிய குரலை
Tape-Record
போல rewind பண்ணி கேட்கிறேன் தினமும்
உன் நிழலை கூட பார்க்க முடியாத நான்
உன்னை தினமும், புனிதமான lotus ஆக பார்க்கிறேன்
உன் மனது இந்த வெள்ளை தாமரை போன்றதால்
வெள்ளை புறா ஒன்றை தூது அனுப்பினால் தான் நீ பேசுவாயோ
இறைவன் வந்து வரம் கேட்டாள் உன்னிடம் பேச வரம் கேட்பேன்
இது கவிதை அல்ல என்னோட மனதின் எண்ணங்கள் ஏன் எனில்
எனக்கு கவிதை எழுத தெரியாது...

பெண்மை

என்னால் என் மனதில் உள்ளதை மறைக்கமுடியவில்லை தடுமாறுகிறேன்.. நீ மட்டும்
எப்படி எல்லாவற்றையும் மனதிற்குள் பூட்டி வைத்திருக்கிறாய் அதுதான் பெண்மையோ..

கவிதைகள்

உன்னை நினைக்கும் பொழுது கவிதைகள்
மனதில் இருந்து உயிர் பெற்று உதிக்கிறது
உன் சுவாசமே(குயிலின் இசை) அதன் உயிர் மூச்சு
உன் வருகையே(நிலவின் ஒளி) அதன் ஆற்றல்
பல கவிதைகள் தோன்றி மறைந்தன
உன் நிழலை பார்க்காமல், குரலை கேட்காமல்
உன் வருகையை எதிர் நோக்கி ஏங்கி இருக்கும்
எஞ்சிய கவிதைகளையாவது காப்பாற்று
தாமரைப் பெண்ணே

சீதைக்கேற்ற ராமன்

தாமரையே உன்னை
என் காதலியாக பார்ப்பதைவிட
என் மனைவியாக பார்க்கவே ஆசை
ஏனெனில் உனக்கு நான்
சீதைக்கேற்ற ராமனாக இருக்க விரும்புகிறேன்
கிரீஷ்ணணாக அல்ல

நிலவு முகம்

நிலவு முகத்தை பார்த்தவுடன் என் மனம் குளிர்ந்தது..
புன்சிரிப்பை பார்த்தவுடன் என் கோவம் எல்லாம் பறந்தது
உன்னை பாத்தால் அந்த சரஸ்வதி கூட பொறாமை கொள்வாள்
அவ்வழ்வு சாந்தம் உன் திரு முகத்தில்......

ஒவ்வொரு நொடியும் ஒரு யுகம் மாதிரி இருக்கு
நீ அருகில் இருந்தால் அனுதினம் உன்னை நினைக்க மாட்டேன்..
நீ தூரத்தில் இருப்பதால் தான் உன்னை நினைத்துக் கொண்டே இருக்கிறேன்
Oh God Please அவளை பார்க்கும் படி செய்
அப்பொழுதாவது நான் அவளை நினைக்காமல் இருப்பேன்

நினைவுகள்

நண்டு கரைக்கு வருவதை

கடல் அலைகள் இழுத்து செல்வது போல்

மனது மறக்க நினைத்தாலும்

உன் நினைவுகள் உன்னுடன் இழுக்கிறது

வேண்டும் அன்பே

வேண்டும் அன்பே நீ எனக்கு .....
அம்மு செல்லம், அப்பு செல்லம், குண்டு மல்லி என்று கொஞ்ச வேண்டும்
தேன் கலந்த அமுதை நிலவைக் காட்டி ஊட்ட வேண்டும்
குழந்தை போல் மடியில் வைத்து தாலாட்டு பாட வேண்டும்
நீ தூங்கும் அழகை இமைக்காமல் பார்த்து ரசிக்க வேண்டும்
அதிகாலை எழுந்து தேநீர் போட்டு கொடுக்க வேண்டும்
உன் விழியில் என் முகத்தை தேட வேண்டும்
உன் வாசத்தை என் மூச்சுக் காற்றாக சுவாசிக்க வேண்டும்

என் வாழ்வின் இறுதி வரை நீ வேண்டும் அன்பே ..


பாசம்

தாயின் அன்பை புரிய வைத்தவள் நீ தான்
என் குரலை கேட்டாள் மகிழ்ச்சி அடைகிறாள் அன்னை
என்னவளின் குரலை கேட்டாள் மகிழ்ச்சி அடைகிறேன் நான்
இது தான் பாசம் என்பதோ

பாசம் வற்றாத ஜீவநதி

அது காட்டாரு போன்றது

வெள்ளம் போல் கரை புரண்டு ஓடுகிறது

இறை பக்தியை விட வலிமையானது

அணை கட்ட முயற்சிக்கிறேன் முடியவில்லை

நான் உன்னிடம் பலமுறை பேச அழைத்தேன்

நீ அன்றே பேசியிருந்தால், நாம் இருவரும் சேர்ந்து

கட்டியிருக்கலாம் அணையை இன்று,

காலம் கடந்தது... அது கடலை சென்றடைந்தே தீரும்...

உன்னிடம்

என் உலகம் நீயாக இருக்கும் போது
எங்கு சென்றாலும் என் மனது
உன்னையே தான் சுற்றிவரும்..

தாமரைப் பூவை பார்த்தவுடன்
என் முகம் மலர்வதாக, பூக்காரி சொல்கிறாள்
உன்னைப் பார்த்தவுடன்
என் மனம் மலர்வதை நீ அறிவாயோ

கலங்கரை விளக்கு


வாழ்க்கை எனும் தீவை சென்றடைய, இறைவன்
பலருக்கு படகை கொடுத்து, வழியை காட்ட மறந்தான்
எனக்கு கலங்கரை விளக்கை காண்பித்து, படகை கொடுக்க மறந்தான்
படகை வாங்கியவர்களோ, இனிதாய் இருந்தும் வாழ்க்கை எனும் கரை சேருவதில்லை
விளக்கின் ஒளியை பெற்ற நானோ, கடினமாயினும் வாழ்க்கை எனும் கரை சேருவேன்
அவன் சந்தோசம் அந்தப் படகோடு சென்றது
என் சந்தோசம் அந்தத் தீவிலே ஆரம்பமாகும்

காதலில் இணைந்தவர்கள் வாழ்க்கையில் இணைவதில்லை
காதலில் இணையாத நாம் வாழ்க்கையில் இணைவோம்

என் மனதை படிக்க உனக்கு மட்டுமே அனுமதி

என் கவிதைகள் உனக்கே சொந்தம்
மற்றவர்கள் படிக்க அனுமதி இல்லை
அவை கவிதைகள் அல்ல, என் மனம்
தாமரை படிக்க மட்டுமே அனுமதி

இந்த ஆண்டில்(2007)


முதல் குரல் உன் குயிலிசை
முதல் காட்சி உன் திருமுகம்
இதோ முதல் கவிதை ...

இசையை ரசிக்கிறேன்
நீ பாடகி என்பதால்
இரவில் குளிர்கிறேன்
நீ வெண்ணிலா என்பதால்
பனியில் நனைகிறேன்
நீ மார்கழி என்பதால்
சூரியனை தொழுகிறேன்
நீ தாமரை என்பதால்
தீர்த்தம் அருந்துகிறேன்
நீ துளசி என்பதால்
ஞானம் வளர்க்கிறேன்
நீ கலைவாணி என்பதால்
உன்னை காதலிக்கிறேன்
நீ தேவதை என்பதால்
என்னைக்கூட விரும்புகிறேன்
நீ காதலிப்பதால்


கவிதை எழுத நினைக்கிறேன், ஆனால் மனது இடம் தரவில்லை உன்னை காணாமல் !

சர்க்கரை பொங்கல் போல்
என்றும் இனிமையாக இருப்பாய்
கரும்பு போல்
என்றும் வளமுடன் வாழ்வாய்
காலை கதிரவன் போல்
என்றும் பிரகாசமாய் இருப்பாய்
மஞ்சள் போல்
என்றும் புகழுடன் திகழ்வாய்

பேசிவிடு

உன் திருவாய் மலர்ந்து பேசிவிடு
நீ மலர மரமாய் துணை நிற்கிறேன்
உன் நிலவு முகத்தை காட்டு
நீ உறங்க தாலாட்டு பாடுகிறேன்
உன் இதயத்தை எனக்கு கொடு
நீ குடியிருக்க ஆலயம் கட்டுகிறேன்
உன் மலர் பாதம் அருகே இடம் கொடு
இறுதிவரை உனக்கே பணி செய்து கிடப்பேன்

ஆடுக ஊஞ்சல், அப்பு தூங்கிய அழகு


ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அப்புச் செல்லம் ஆடுகவே
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அம்முச் செல்லம் ஆடுகவே

மதுரையில் வாழும் இளவரசி
மனதில் என்றும் நிலைத்திடுவாய்
திருவடி தேடி வரும் எனையே
புன்னகை புரிந்தே அழைத்திடுவாய் (ஆடுக)

எந்தன் அன்னை சரஸ்வதி
உருவதில் நீயும் இருக்கின்றாய்
உள்ளத்தின் கவலைகள் அத்தனையும்
உன்னிடம் வந்தால் போக்குகின்றாய் (ஆடுக)

எங்கள் வீட்டின் தாமரையே
எங்கும் வீசும் உன் மணமே - உன்
தெய்வீக குரலின் மகிமையினால்
மங்கல வாழ்வு மலர்ந்திடுமே (ஆடுக)

அன்பை பொழியும் மழைத்துளியே
இதயத்தை நனைத்திடும் உயிர்த்துளியே - உன்
இதயம் எனும் ஆலயத்தில், பூவாய் மலர
இடம் தருவாய் ! (ஆடுக)

more lines to come......

******அப்பு தூங்கிய அழகு ***************


ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல்

அப்புச் செல்லாம் தூங்குகின்றாள் தாலேலோ

அவள் வாய்நிறைய அமிர்தம் உண்டு, புன்னகையை காட்டியபின்

ஓய்வெடுத்து தூங்குகின்றாள் தாலேலோ

ஓய்வெடுத்து தூங்குகின்றாள் தாலேலோ

பார்வதி தேவியரின் கன்னத்திலே கன்னம் வைத்து

அம்முச் செல்லம் தூங்குகின்றாள் தாலேலோ

அந்த மந்திரத்தில் அவர் உறங்க மயக்கத்திலே இவள் உறங்க

மண்டலமே உறங்குதம்மா ஆராரோ

மண்டலமே உறங்குதம்மா ஆராரோ

(ஆயர்பாடி)

...............
செல்லாம் அவள் தூங்கிவிட்டாள் காசினியே தூங்கிவிடும்

அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ - அவள்

பொன்னழகைக் காண்பதற்கும், போதைமுத்தம் பெறுவதற்கும்,

குயிலின் இசை கேட்பதற்கும்

கன்னியரே கோபியரே வாரீரோ

(ஆயர்பாடி)

******அப்பு தூங்கிய அழகு ***************

என் கவிதையும் பாடலும் அழகு இல்லை

ஆனால் அதற்கு அர்த்தம் உண்டு, உயிர் உண்டு

ஏன் எனில் அவை என் மனதின் எண்ணங்கள்

கண்ணாடி முகத்தை காட்டுவது போல்

என் கவிதைகள் என் மனதைக் காட்டும்

உன் மனதை யார் காட்டுவார் ??

தற்பொழுது அவளிடம் பேச அனுமதி இல்லை

மலரை தரிசிக்க அனுமதி வழங்கிய நீ
உன்னிடம் பேச அனுமதி கொடு
இதயக் கோவிலில் இடம் தந்த நீ
உன்னை மணமுடிக்க அனுமதி கொடு

தாமரையை தரிசித்த விழிகளுக்கு
ரோஜாக்களை பார்க்க அனுமதி இல்லை
I don't see others, even if i see they are looking like you....nee idhayathil irundhu kondu en pulankalai iyakughiraai
***************************

உன் இதயத்தின் அருகே இருக்கும் போது

ரோஜாவின் இதழில் உன்(தாமரை) முகத்தை தேடுகிறேன்

குயிலின் இசையில் உன் குரலை கேட்கிறேன்

சிற்பியின் சிலையில் உன் உருவத்தை கற்பனை செய்கிறேன்

- என்ன செய்வது

நீ மௌனம் என்னும் வேளிக்குள் இருக்கின்றாயே !

இரு நொடி

ஒரு நொடியில் நிலவு முகத்தை ரசித்தேன்
மறு நொடியில் மலர் பாதத்தை தரிசித்தேன்
குழந்தையின் சிரிப்பை இன்று கண்டேன் :-)

சின்ன சின்ன ஆசை

வைகறை,காலை,நண்பகல், ஏற்பாடு, மாலை,யாமம் எனும் ஆறு பொழுதிலும் உன்னருகே இருக்க ஆசை

வைகறைப் பொழுதில்

தாமரைக்கு தேநீர் போட்டு கொடுக்க ஆசை

மல்லிகையுடன் சேர்ந்து கோலம் போட ஆசை

காலைப் பொழுதில்

தேன் கலந்த அமுதை ஊட்டி விட ஆசை ...

நண்பகல் பொழுதில்அப்புவிடம் பேசிக் கொண்டிருக்க ஆசை

ஏற்பாடு பொழுதில்நிலவு முகத்தை பார்த்துக் கொண்டிருக்க ஆசை

மாலை பொழுதில்

மலர் பாதத்திற்கு மருதானி வைத்து விட ஆசை

இரவு(யாமம்) பொழுதில்

அம்முவை தாலாட்டு பாடி தூங்க வைக்க ஆசை

தூங்கும் அழகை கண்-இமைக்காமல் பார்க்க ஆசை

பெயரின் ஒற்றுமை

என்னை பெற்ற அன்னையின் பெயர் பார்வதி

நான் வணங்கும் தெய்வத்தின் பெயர் பார்வதி

என் துணைவியாகும் தாமரையின் பெயரும் பார்வதி

சிற்பியானேன்

உன்னால் புலவனானேன்

மனதில் கவிதை பூத்தது

உன்னால் பக்தனானேன்

தேவியின் அன்பு கிடைத்தது

உன்னால் சிற்பியானேன்

தாமரையின் சிற்பம்(மனம்) உருவாகியது

முருகரும் விநாயகரும்

********** தேவலோகத்தில் *************
[ தேவிகள் மூவரும் தேவலோகம் வந்தடைந்தனர் ]

முருகர் : அம்மா எங்கு சென்றீர்கள்
பார்வதி : பூமிக்கு சென்று இருந்தோம் மைந்தா
விநாயகர் : எதற்கு அம்மா
பார்வதி : உனக்கு தேவர்கள் சொல்லவில்லையா, நாங்கள் தாமரை பெண்ணை சந்தித்து வருகிறோம்

முருகர் : யார் அந்த பெண் அம்மா
பார்வதி தேவி: அவள் உங்களை போன்று சமத்தானவள், பெயருக்கு ஏற்றார் போல் அழகாகவும், மென்மையாகவும் இருப்பாள். மரத்தின் உச்சியில் உள்ள ஆப்பிள் போன்று உயர்ந்து, சிறந்து விளங்குபவள். நிலவின் குளுமை, தாமரையின் மலர்ச்சி, குழந்தையின் சிரிப்பு, துளசியின் புனிதம் இவை அனைத்தையும் கொண்ட தேவதை அவள்.

விநாயகர்: நாங்கள் சென்று பார்த்து வருகிறோம் அம்மா.
பார்வதி: இல்லை மைந்தா... தற்பொழுது அவள் busy ஆஹ இருப்பாள். நீங்கள் சென்றாள் இடையூராக இருப்பீர்கள்
முருகர் & விநாயகர் : இல்லை அம்மா
பார்வதி: அப்படி என்றாள் ஒருவர் மட்டும் சென்று வாருங்கள்

முருகர் : அண்ணா, நான் சென்று பார்த்து வருகிறேன்...
விநாயகர்: இல்லை இல்லை, நான் தான் மூத்தவன் ஆதலால் நான் முதலில் பார்த்து வருகிறேன் .. நீ நலம் விசாரித்ததாக சொல்கிறேன்...
பார்வதி: ஏன் சண்டை போடுகிறீர்கள், யார் இந்த உலகத்தை முதலில் சுற்றி வருகிறீர்களோ அவர்கள் தாமரைப் பெண்ணை பார்த்து வாருங்கள்

[விநாயகர், முருகர் இருவரும் உலகத்தை சுற்றி வர கிளம்பு கின்றனர்]

முருகர் தனது வாகனமாகிய மயிலை தேடுகிறார்.... அது பூலோகத்தில் இருப்பதை அறிந்து(தாமரைப் பெண்ணிடம் இருப்பதை அறியாமல்) பூமிக்கு செல்கிறார்... விநாயகர் தன்னால் இந்த உடம்பை வைத்துக்கொண்டு உலகத்தை சுற்றி வர முடியாது என்பதை உணர்ந்து, சற்று சிந்திக்கிறார்... தாய் தந்தையரே உலகம் என்பதால் அவர்களை சுற்றினாள் உலகத்தை சுற்றியதற்கு சமமா என்று முனிவர்களிடம் கேட்கிறார்... முனிவர்கள் ஆமாம் என்றவுடன் விநாயகர் தாய் தந்தையறை சுற்றி வந்து தாமரை பெண்ணை பார்க்க கிளம்புகிறார்...

**********************பூமியில் ***************
முருகர்: நீ எப்பொழுது இங்கு வந்தாய்
மயில்: உங்கள் பக்தன் வேண்டுகோலுக்கு இணங்க நீங்கள் தான் என்னை இங்கு அனுப்பி வைத்தீர்கள்..
முருகர்: ஓ... ஆமாம் மறந்து விட்டேன்... சரி வா போகலாம், நாம் தாமரை பெண்ணை பார்க்கச் செல்ல வேண்டும்
மயில்: அவள் இங்கு தான் இருக்கிறாள் முருகா !
முருகர்: அப்படியா மிக்க நன்று ....

[முருகர் மயில் வாகனத்தில் ஏறி உலகத்தை சுற்றி விட்டு தாமரையின் அலுவலகம் வந்து சேர்ந்தார்...அதே நேரம் விநாயகரும் அங்கு வந்து சேர்ந்தார்]

******** தாமரையின் அலுவலகம் **********

[தாமரை அழகாக கோடிங் செய்து கொண்டிருந்தாள்... முருகரும் விநாயகரும் அவள் முன் காட்சி கொடுத்தனர்... அவர்கள் தன்னை பார்க்க வந்ததை அறிந்து மகிழ்ச்சி அடைந்தாள் தாமரை...]

விநாயகர்: (தாமரை busy ஆக இருப்பதை அறிந்து முருகனிடம் ) தம்பி நான் தாமரையிடம் பேசி விட்டு வருகிறேன்...நீ சற்று நேரம் கழித்து வா !
முருகர்: நான் தான் உலகத்தை சுற்றி விட்டு வந்தேன், என்னை நீ மறுபடியும் ஏமாற்றாதே....

விநாயகர்: இல்லை தாய் தந்தையரை சுற்றி விட்டு, நான் தான் முதலில் வந்தேன்...
தாமரை: (சிரித்த முகத்துடன்)என்ன இங்க வந்தாச்சுல...அப்புறம் என்ன (செல்லமாக திட்டினாள்) தாமரை சொன்னவுடன் இருவரும் சரி என்று கேட்டுக்கொண்டனர்
************ திருவிளையாடல் ***********
முருகர்: என்ன செய்து கொண்டிருக்கிறாய்....
தாமரை:பாத்தா தெரியல program code செய்கிறேன்...
முருகர் : hmm...சரி கொடு நான் செய்கிறேன்
தாமரை: இல்லை உனக்கு எழுத தெரியாது...நீ நான் எழுதிய ப்ரோக்ரம டெஸ்ட் பண்ணு...உனக்கு தான் பக்தர்களை நல்லா சோதிச்சு பழக்கம்' ல !
முருகர்: ஆமாம் பெண்ணே...நீயும் தான் சோதிக்கிறாய்,.. ப்ரோக்ரமா எப்படி டெஸ்ட் செய்து பிழையை நீக்குகிரோமோ அதை போல தான் என் பக்தனின் ஆன்மாவை மேன்மைப் படுத்துகிறேன்...

தாமரை: சரி நான் இப்பொழுது சாப்பிட போகிறேன்...
முருகர்: அப்ப டெஸ்டிங் ?
தாமரை: மதியம் வந்து பார்த்துக்கோ

விநாயகர்: எனக்கு...
தாமரை: என்ன உனக்கு இல்லாமலா... புளியோதரை தான் இருக்கு.. நீங்கள் சாப்பிடுவீர்களா ??...
முருகர்: எங்களுக்கு மிகவும் பிடிக்கும்....

[ தாமரை முருகர், விநாயகர் மூவரும் சேர்ந்து சாப்பிட்டனர்]

தாமரை: நான் இன்று ஊருக்கு செல்கிறேன், ஆதலால் நீங்கள் என் வேலையை பார்த்து கொள்ளுங்கள்
முருகர்: சரி நீ சென்று வா, நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்
விநாயகர்: அப்பு Happy Vacation !

**** lotus came back to office ****

முருகர்: Welcome lotus !
தாமரை: ஹ்ம்ம்ம்.... என்ன செய்தீர்கள், நான் வரும் வரை
முருகர்: வேலை ஒன்றும் இல்லை, ஆதலால் நாங்கள் விளையாடிக் கொண்டிருந்தோம்
விநாயகர்:இல்லை அப்பு, அவன் உன் தோழியிடம் கடலை வருத்துக் கொண்டிருந்தான் :-)
தாமரை: ஓ...அப்படியா விசயம், ஏய் தெய்வானையிடம் சொல்கிறேன் பார்
முருகர்: சொல்லாதே அவளிடம்.... சும்மாதான் பேசிக்கொண்டிருந்தேன் தாமரை: சரி சும்மாதான் சொன்னேன்
முருகர் & விநாயகர்: Happy New Year lotus !!
தாமரை: Thanks and same to you !

[சில நாட்கள் சென்றது... முருகரும், விநாயகரும் விடை பெறுகின்றனர் ]முருகர்: அப்பு இங்கே வா...
தாமரை: ஹ்ம்ம்....என்ன சொல்லு !
முருகர்: உன் பெண்மையை கண்டு வியக்கிறேன் பெண்ணே ! உன் சொற்களால் ஒருவனை கவிஞனாக்கினாய், உன் அன்பால் அவன் புலன்களை இயக்குகிறாய். பக்தனாக்கினாய், பாசம் கற்றுக் கொடுத்தாய்.. நீ அருகில் இல்லாமல், உன்னை பார்க்காமல் அவனுள் எத்தனை மாற்றங்கள் ??... நீங்கள் பேசும் காலம் விரைவில் வந்து விடும், அன்றே அவன் வாழ்க்கையின் தொடக்கம்.

விநாயகர்: அவன் இதயத்தை உன் குரல் தான் சாந்தமாக்கும்... நீ எப்பொழுதும் சந்தோசமாக இருப்பாய், தாமரை மலர் போல் புகழுடன் இருப்பாய்... நாங்கள் வருகிறோம்
தாமரை: சரி நான் பேசுகிறேன்... மயில் ?
முருகர்: அது, அவன் உன்னை மணமுடிக்கும் வரை உனக்கு துணையாக இருக்கும்.
[முருகரும், விநாயகரும் விடை பெற்றனர் ]

Friday, December 22, 2006

Lotus dance

Young Dancer Brings Grace and Elegance to Role of Maiden




In China, Xue’er began the study of dance at the age of six and half at a specialized dance school; this laid a solid foundation for her dancing. She moved to Canada when she was 13 and studied ballet in a performing arts high school. The following year, she joined the Lotus Art Performance Group to study various dance styles, including classical Chinese dance and ballet.
Xue’er says that even though she started learning dance at a very young age she felt that over the last several years she has progressed exponentially and has come to understand dance and its deeper meanings.
She mentioned that her deepest understanding is that dance is not for showing off, but for bringing beautiful things to others, therefore the dancer must pay attention to morality and maintain a pure and contented heart.
the dance “The Goddess of Flowers” portrays the descent of a goddess from the heavens. She suffers all the hardships of the human world and spreads truth and happiness. The dance demonstrates pure and honest feminine beauty. The lotus flower grows out of mud, yet remains pure and clean.

lotus dance in china....





Thursday, December 21, 2006

Merry Christmas

Happy Christmas to you 'Lotus' & your 'family'

May santa brings 'tons of Christmas presents', 'lots of chocolates', 'Happiness','joy' to you 'lotus' & your family on Christmas Eve. The warmth and joy of Christmas, brings us closer to each other.

Wednesday, December 20, 2006

Sacred Lotus

Lotus flowers are beautiful in both appearance and smell. Lotus is symbol of purity. Starting life as a seed, it grows in the muddy darkness at the bottom of a pond. The darkness is like our ignorance - we can't clearly see the truth about life. The seed grows toward the warmth and light of the sun just as humans naturally grow toward the warmth of love and compassion, and toward the light of truth. The mature flower floats on the surface, bathing in the full light of the sun, well 'anchored' but moving freely according to the flow of the water - the changing current of any situation.

Tuesday, December 19, 2006

Krishna....i love you



கிருஷ்ணா நீ வேணும், உன்னை பார்த்துக்கொண்டே இருக்கணும்.
My sweet krishna ....i love you so much da... radhai is lucky

  • Taking shelter of Srimati RADHARANI we can be with Krishna too - She will take us by the hand to Him
  • We can't see Krishna unless He is willing to show Himself to us. He become willing when we introduced by His devotee
  • Krishna means 'all-attractive', by coming in contact with KRISHNA all our sences will be fully satisfied
  • The intence desire to see Krishna - all it takes for Srimati Radharani to take notice of you and guide you to Krishna

Heart of lotus


Thursday, December 14, 2006

3 things

3 Smells I love:

  1. jasmine flower
  2. lotus flower
  3. Smell of rain

3 Smells I hate:

  1. Cigarette
  2. நெய்
  3. வெண்ணை

3 Jobs that I have had in my life:

  1. S/W Professional

3 Movies that I could watch over and over:

  1. jillunu rou khadhal
  2. Mouna Ragham
  3. Khadhal mannan

3 Fond memories:

  1. Lost my school bag (v std, i think)
  2. Ooty Blue (ug college tour trip) - Sight adichathu
  3. The days I did project with lotus !

3 Things I like to do:

  1. Have a trip to places(hill stations) with friends.
  2. Talking with lotus
  3. Visit temples with my family

3 Of my favorite foods:

  1. Fish
  2. Fruits (sappotta,seetha,orange)
  3. Ice creams, Milk shakes

3 Places I would like to be right now:

  1. My sweet Home
  2. Forest
  3. Temple

Wednesday, December 13, 2006

1'st Anniversary

Today is my 1'st love anniversary

yes.... i proposed my love to lotus on December 13th 2005 8.00 p.m

I am celebrating this day :-) very well... Today morning i went to shiva temple with bunch of lotus flowers and panneer pushpam(shiva's favorite). At that time abishegham(பால்,பழம் பன்னீர்,பஞ்சாமீர்தம், சந்தனம், திருநீர்) was going on.... So i was lucky to see that too. After the abishegham they decorate god shiva with flowers... They had kept my white lotus flower on shiva head... i become very happy.


Monday, December 11, 2006

கலங்கரை விளக்கு


வாழ்க்கை எனும் தீவை சென்றடைய, இறைவன்
பலருக்கு படகை கொடுத்து, வழியை காட்ட மறந்தான்
எனக்கு கலங்கரை விளக்கை காண்பித்து, படகை கொடுக்க மறந்தான்
படகை வாங்கியவர்களோ, இனிதாய் இருந்தும் வாழ்க்கை எனும் கரை சேருவதில்லை
விளக்கின் ஒளியை பெற்ற நானோ, கடினமாயினும் வாழ்க்கை எனும் கரை சேருவேன்
அவன் சந்தோசம் அந்தப் படகோடு சென்றது
என் சந்தோசம் அந்தத் தீவிலே ஆரம்பமாகும்


படகு கிடைத்தவர்கள் - காதலில் இணைந்தவர்கள்
They can say that he/she is my lover..but they can't say that he/she will be the life partner.
கலங்கரை விளக்கின் ஒளி - வாழ்க்கை துணை அறிந்தவன்
I can say that she will be my life partner...But i am not be allowed to say that she is my lover.

This is really tough...., It's better to sail without boat and light...
1. with boat and with light (Easiest - Best) - 0 %
2. without boat & without light (No Tension) - 39 %
3. with boat & without light (Easiest - good) - 60 %
4. without boat & with light (Toughest - Better) - 1 %

No one have the easiet way(1), But rarely have the toughest way(4) like me...

காதலில் இணைந்தவர்கள் வாழ்க்கையில் இணைவதில்லை
காதலில் இணையாத நாம் வாழ்க்கையில் இணைவோம்


Friday, December 08, 2006

Complete Bliss

Tomorrow i am going to ISKON(after 1-1/2 years) with my friends.... This is the place where my soul gets full happiness like when i hear my lotus voice.

Words from lord Krishna

Once Lord Krsna considered with His heart: "Everyone says that I am complete bliss, full of all rasas. All the world derives pleasure from Me. Is there anyone who can give Me pleasure? One who has a hundred times more qualities than Me could give pleasure to My mind. One more qualified than Me is impossible to find in the world. But in Radha alone I feel the presence of one who can give Me pleasure.

Wednesday, December 06, 2006

un velaya paar....

innaiku velaye illa.... Today i see her jobs in spool, it's getting jcl error...i found the problem(blank spaces before set stmt), but don't know how to tell.....she didn't found the error...she did something and makes the job to execute...after this the job gets abend...here the ezt pgm variable not defined... i sent msg thru same-time...after this also she is running the job without correcting the pgm... Atlast she corrected that... Hey lotus...i helped as a friend...thittadhe..... ippa kovam ellam poyirukum nu ninaikirean....

Monday, December 04, 2006

திருக்கார்த்திகை

03/12/2006
அன்று திருக்கார்த்திகை திருநாள் ... காலை 11 மணிக்கு பூச் சந்தைக்கு சென்று, பூ வியாபாரிகள் வாங்குவதற்கு முன்பு அழகிய தாமரைப் பூக்களை எல்லாம் வாங்கினேன்... அன்று மாலை பொழுது .... தேவி பார்வதியை வழிபட கோவிலுக்கு தாமரை மலர்களுடன் சென்றேன் ... மலர்களை சுயம்புக்கு சூடினார்கள்....

தாமரை மலர் பூஜையை ஏற்றுக் கொண்டேன்
தாமரை மலர் போல் மலரும் உன் மனம் ...
-- என்றாள் அன்னை

முப்பெரும் தேவிகள் எங்கே ?




முனிவர்: முப்பெரும் தேவிகள் எங்கே ?
நாரதர்: பூமியில் அவர்களை போல் ஒரு பெண் இருப்பதை கேள்வி பட்டு பார்க்க சென்றுள்ளனர்
முனிவர்: யார் அந்தப் பெண் எனக்கு தெரியாமல், எப்படி இது சாத்தியம்
நாரதர்: அந்த பெண்ணின் பெயர் தாமரை என்ற அப்பு... நாராயணா!

முனிவர்:ஓ.. நானும் சென்று வருகிறேன்...
நாரதர்: நாராயணா!, முனிவரே தர் சமயம் அவளை பார்க்க இயலாது..
முனிவர்: ஏன் நாரதரே !
நாரதர்: அந்த பெண் தர்சமயம் busy ஆக இருப்பதால் தேவியர்
மூவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது

******* சில நாட்கள் சென்றது *****

முனிவர்: ஏன் தேவியர் மூவரும் இன்னும் வரவில்லை

நாரதர்: அவர்கள் அந்த பெண்ணிற்கு உதவியாக பூமியிலே தங்கி விட்டனர்

முனிவர்: என்ன! அந்த பெண்ணிற்காகவா

நாரதர்:ஆம் முனிவரே...அந்த பெண்ணின் ப்ரோஜெக்ட் production செல்கிறது, அதற்கு உதவியாக சரஸ்வதி,லக்ஷ்மி,பர்வதி தேவிகள் மூவரும் உள்ளனர்

சரஸ்வதி தேவி ப்ரோஜெக்ட் செய்வதற்கு உதவியாகவும், லக்ஷ்மி தேவி அவள் வீடு திரும்பும் போது பாதுகாப்பிற்கு துணை இருப்பாள்

தாமரை தினமும் கண் விழித்து வேலை செய்வதால், அவள் கண் அயரும் போது பார்வதி தேவி தேன் கலந்த அமுதை ஊட்டுவாள்... அன்பு,பாசம்,சக்தி இவை அனைத்தையும் அவளுக்கு அளிப்பாள்

********* சில நிமிடங்களில் *********

இந்திரன்: இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் நாரதரே..
நாரதர்: முனிவரின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்துக் கொண்டிருக்கிறேன்
இந்திரன்:அதற்கு இப்பொழுது நேரம் இல்லை... நீங்கள் இருவரும் தேவர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு பாற்கடல் வந்து சேருங்கள்
நாரதர் & முனிவர்: ஏன் இந்திரரே !
இந்திரன்: சற்று நேரம் முன்பு பார்வதி தேவியிடம் இருந்து ஓலை ஒன்று வந்தது,


ஓலையில்
[ தேவாஅமிர்தம் தீர்ந்து விட்டது !... நீங்கள் உடனே தேவர்களை அழைத்துக்கொண்டு பாற்கடலில் இருந்து அமிர்தம் எடுத்துக் கொண்டு வாருங்கள் ...]

இப்படிக்கு,
பார்வதி தேவி

முனிவர்: இரண்டு ஆண்டுகளுக்கு தேவையான அமிர்தம் இருந்ததே
இந்திரன்: ஆம்...
முனிவர்: பிறகு எப்படி...
இந்திரன்: பூமியில்...தாமரை பெண்ணிற்கு அமிர்தம் மிகவும் பிடிக்குமாம், தேவி அந்த பெண்ணிற்கு அன்னம் ஊட்டிக் கொண்டிருக்கிறாள் ...தேன் கலந்த அமிர்தம் வழங்கினாள் தான் நன்றாக சாப்பிடுவாளாம்..
முனிவர்:அப்படியா...அந்த பெண்ணை பற்றி தான் பேசிக் கொண்டிருந்தோம்
நாரதர்: நாராயண !! ...பேசி கொண்டிருக்க நேரம் இல்லை.. நாம் போகலாம் வாருங்கள்

******** இடம்: பாற்கடல் ******

நாரதர் : அமிர்தம் எடுப்பதற்கு,தேவர்கள்,அசுரர்கள் வந்து விட்டார்கள் மந்தார மலையும் தயாராக இருக்கிறது, ஆனால் பாற்கடலை கடைவதற்கு வாசுகி பாம்பு இன்னும் வரவில்லை
இந்திரன்: ஏன் நாரதரே...
நாரதர்: வாசுகி பாம்பு பூலோகத்தில் உள்ளது
இந்திரன்: என்ன ??
நாரதர்: ஆம்...பூமியில் மழை பெய்வதால், தாமரை பெண்ணிற்கு குடையாக இருப்பதற்கு தேவி சரஸ்வதி வாசுகி பாம்பை அழைத்துச் சென்றுள்ளார்...
இந்திரன்: ஓ..அப்படியா, தேவிக்கு தகவல் அனுப்பி.. உடனே வாசுகியை வரச் சொல்லுங்கள் நாரதரே...
நாரதர்: இப்பொழுதே ....

************ பூலோகத்தில் **************

தகவல் அறிந்ததும், தேவி சரஸ்வதி மழை பொழிவதை சிறிது காலம் நிறுத்த வருட பகவானுக்கு உததரவிட்டால் !. வருட பகவான் தேவியின் ஆணையை உடனே நிறைவேற்றினார், மழை நின்றது, வாசுகி பாற்கடல் சென்றது......

தேவி பார்வதி (பதில் ஒலையில்): தாமரையின் ப்ரோஜெக்ட் வெற்றிகரமாக 17/11 அன்று prod சென்றது... தாமரை மிகவும் சந்தோசமாக உள்ளார்.. அதனால் தேவர்களுக்கு இனிப்பு வழங்குங்கள் !. சீக்கிரம் அமிர்தம் தயார் செய்து கொண்டு வாருங்கள், அமிர்தத்தின் முதல் துளி தாமரை பெண்ணிற்கு !

******** இடம்: பாற்கடல் ******

தாமரையின் ப்ரோஜெக்ட் prod சென்றத்தை கேள்விப்பட்டதும்....எல்லோரும் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்... நாரதர் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்... அதே உற்சாகத்தில் அமிர்தம் கடய சென்றனர்..

வாசுகி வந்ததும் தேவர்கள், அசுரர்கள் சேர்ந்து மந்தார மலையை மத்தாகவும், வாசுகியை கயிராகவும் வைத்து பாற்கடலை கடைகின்றனர் ! அமிர்தம் பால் போல் பொங்குகிறது(தாமரை மலர்வதை போல்)... தேவர்கள்... அமிர்தத்தை கலசத்தில் அடைத்து பூமிக்கு மயிலிடம் கொடுத்து அனுப்பினார்கள்..

************ பூலோகத்தில் **************

அசுரர்கள் அமிர்தத்தை பாதி வழியில் அபகரிக்க முயன்றனர்...ஆனால் அது தாமரை பெண்ணிற்கு என்று தெரிந்ததும் அச்சமுற்று திரும்பிச் சென்றனர்... மயில் (தாமரையின் தோழி) அமிர்தத்தை பத்திரமாக பார்வதி தேவியிடம் கொண்டு வந்து சேர்த்தது...

தாமரை பெண்ணிற்கு மிகுந்த சந்தோசம்...அந்த முக மலர்ச்சியை பார்க்க கோடி கண்கள் வேண்டும்

பார்வதி தேவி தாமரையை(பௌர்ணமி நிலா) மடியில் வைத்து குழந்தை போல் அமிர்தத்தின் முதல் துளியை நிலவைக் காட்டி ஊட்டினாள். இந்த காட்சி, யசோதை கண்ணனுக்கு அன்னம் ஊட்டியது போல் அழகாக இருந்தது, தாமரையின் இருப்பிடம் பிருந்தாவனம் போல் காட்சி அளித்தது

************ இந்திரலோகத்தில்***********

நாரதார்: தேவிகள் மூவர் இல்லாமல் படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய பணிகள் சற்று பாதிப்படைந்துள்ளது...

இந்திரன்: ஏன் நாரதரே....

நாரதர்: எல்லாம் அறிந்த நீங்களா கேட்பது, சக்தி இல்லையேல், சிவன் இல்லை... இது உலகம் அறிந்தது

இந்திரன்: ஆம்... யாம் அறிவோம் !

நாரதர்: தேவிக்கு ஓலை எழுதி விட்டேன், நீங்கள் தான் நேரில் சென்று இதை தேவியரிடம் தெரிவிக்க வேண்டும்

இந்திரன்: இதோ இப்பொழுதே பூலோகம் செல்கிறேன்

************ பூலோகத்தில் **************

இந்திரன்: வணக்கம் தேவி !

தேவி சரஸ்வதி: வணக்கம், என்ன விஷயம் இந்திரரே

இந்திரன்: மேலோகத்தில் தாங்கள் மூவர் இல்லாமல் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய பணிகள் சற்று தாமதம் அடைந்துள்ளது...

தேவி பார்வதி: யாம் அறிவோம்

தேவி லக்ஷ்மி: தாமரையின் ப்ரோஜெக்ட் இல் டெஸ்டிங் நடைபெறுவதால் நாங்கள் மூவரும் ஒரு வாரம் கழித்து வருவதாக... மும்மூர்த்திகளிடம் போய்ச் சொல்லுங்கள்..

இந்திரன்: அப்படியே ஆகட்டும்

*********தாமரை அன்னம் சாப்பிட்ட அழகு*******

தேவி பார்வதி தாமரைக்காக வெள்ளிக் கின்னத்தில் சாதம்,பால்,பழம் தேன்,அமிர்தம் இவற்றை நன்றாக பிசைந்து, சாப்பிட ஏதுவாக உருண்டை பிடித்து அன்னம் தயார் செய்தாள்...

பார்வதி: அப்பு இங்கே வா... சாப்பிடலாம்

தாமரை: அம்மா பொறு.. நான் ஒரு package caste செய்து விட்டு வருகிறேன்... பர்வதி: வா மா செல்லம்...உனக்கு பசிக்கும்'ல... அதனை தேவி சரஸ்வதி பார்த்துக்கொள்வாள்

தாமரை: சரி மா.. நான் வருகிறேன்...

[யசோதையின் மடியில் கண்ணன் அமர்ந்ததை போல், அப்பு அன்னை மடியில் அமர்ந்தாள்]

தாமரை: அம்மா நிலா எங்க ?

[அன்று அமாவாசை ஆதலால் நிலவு தோன்றவில்லை பார்வதி தேவி அப்புவிற்காக நிலவை தோன்ற செய்தால் - நிலவுக்கு நிலவை காட்டினாள்]

அன்னை பார்வதி: நிலா வந்துவிட்டது...இப்ப சாப்பிடு.. கண்ணா

[நிலவை பார்த்தவுடன்...தாமரை சமத்தாக சாப்பிட்டாள்]

நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடி வா

மலை மீது ஏறி வா... அப்பு செல்லத்திற்கு

மல்லிகைப் பூ கொண்டு வா !

பாட்டு பாடி நிலவை காண்பித்து, தேவி பார்வதி தாமரையை சாப்பிட வைத்தாள்

******தாமரை அண்னம் சாப்பிட்ட அழகு*****

தாமரை: அம்மா நான் தூங்கணும், நீ ஒரு பாட்டு பாடு ..

சரஸ்வதி வீணை இசைக்க, பார்வதி தேவி பாட்டு பாட...செல்லம் இனிதாய் உறங்கினாள்

******அப்பு தூங்கிய அழகு ***************

ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல்
அப்புச் செல்லாம் தூங்குகின்றாள் தாலேலோ
அவள் வாய்நிறைய அமிர்தம் உண்டு புன்னகையை காட்டியபின்
ஓய்வெடுத்து தூங்குகின்றாள் தாலேலோ ஓய்வெடுத்து தூங்குகின்றாள் தாலேலோ

******அப்பு தூங்கிய அழகு ***************

********* ஒரு வாரம் சென்றது ******

(தேவிகள் தாமரையை விட்டு செல்ல மனம் இல்லாமல், விடை பெறுகின்றனர்)

முப்பெரும் தேவிகள் விடை பெரும் நேரம் வந்தது

தேவி பார்வதி : தாமரையே உன்னிடம் இருந்த நாட்கள் கண்ணன் பிருந்தாவனத்தில் களித்த நாட்கள் போன்று இனிமையாக இருந்தது.... எங்களை அன்பால் திளைக்க வைத்தாய்.. யசோதை பெற்ற மகிழ்ச்சியை அடைந்தோம்.. நாங்கள் விடை பெறுகிறோம் ....


சரஸ்வதி: உனக்கு என்ன வேண்டும் கேள்..

தாமரை: அம்மா இதே அன்பு எனக்கு எப்பவும் வேண்டும்

சரஸ்வதி: நிச்சயம் கிடைக்கும் பெண்ணே

தாமரை: நீங்கள் சென்ற பிறகு..??

லக்ஷ்மி: குழந்தாய் உனக்கு ஏற்ற துணைவன் அமைவான், உன்னை எப்பொழுதும் அன்பாக பார்த்துக் கொள்வான்.

தாமரை: சரி அம்மா.

முப்பெரும் தேவிகள்: எங்கள் அருள் உனக்கு எப்பொழுதும் உண்டு

[தாமரை முகம் மலர தேவிகள் விடை பெற்றனர் ]